கணினி குற்றச் செயல்களில் ஈடுபடும் நோக்கத்தில் 38 சீன பிரஜைகள் நேற்று (ஏப்ரல் 1) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிதி மோசடி தொடர்பான கணினி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் இவர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சீன தூதரகத்தின் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்களில் 33 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வசம் இருந்த 40 மடிக்கணினிகள், 120 கையடக்கத் தொலைபேசிகள், பல கணினி உபகரணங்கள் மற்றும் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Tags:
இலங்கை செய்திகள்



