மொனராகலை பகுதியில் இன்று நிலநடுக்கம்

srilanka tamil


இன்று (21) காலை 9.20 மணியளவில் மொனராகலைக்கும் பாதல் கும்புரவிற்கும் இடையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


இது 2.9 ரிக்டர் அளவுகோலாக பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு விடுத்துள்ள விசேட பொலிஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று காவல்துறை தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பல உள்ளூர்வாசிகள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்