கூறிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவத்தால் ஒருவர் மரணம்

ஏத்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கொல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.


கம்பளை - கொஸ்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் கைது

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கொலையை செய்த 69 வயதுடைய சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏத்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்