மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
முக்கியமாக மவுஸ்ஸகலே நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மஸ்கெலியா ஓயாவின் மிரியகோட்டே மற்றும் ஸ்ரீபாத காப்புக்காடு ஆகிய பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மஸ்கெலியா ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் முர்ரே மற்றும் காட்மோர் நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
பெய்து வரும் அடை மழையுடன் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:
Malaiyakam



