கிணற்றில் வீழ்ந்த 6 வயது மகள் - காப்பாற்ற முயன்ற தாய் இருவரும் மூழ்கி மரணம்! tamillk news

கிணற்றில் வீழ்ந்த 6 வயது மகள் - காப்பாற்ற முயன்ற தாய் இருவரும் மூழ்கி மரணம்!


 வாரியபொல வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதான மகளும் அவரது தாயும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில்  வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.


குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயின்ற 6 வயதான ஆர்.எம். கோவித சாரமித், 37 வயதுடைய தாயான லக்மாலி வீரசிங்க ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


இவர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) வீட்டுக்கு  அருகிலுள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்றதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். 


கிணற்றில் வீழ்ந்த சிறுமியைக்  காப்பாற்ற தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


சிறுமியின்  தந்தை கடற்படையில் பணிபுரிவதாகவும், அவர் தூர மாகாணத்தில் இருப்பதால், தாயும்  மகளும் மட்டுமே வீட்டில் நேரத்தைக் கழிப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்