தலையின்றி சடலமாக மீட்கப்பட்ட பெண்: பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரண்! tamillk news

 

tamillk news

பியகம - கொட்டுன்ன பகுதியில் கை, கால்கள் மற்றும் தலையின்றி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சபுகஸ்கந்த காவல்நிலையத்தில் இன்று பிற்பகல் சரணடைந்துள்ளார்.


காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, குறித்த சந்தேகநபருக்கு சொந்தமானதென கருதப்படும் மகிழுந்து ஒன்று நுவரெலியா – சந்ததென்ன விகாரைக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது.


கடந்த செப்டம்பர் 28ம் திகதி 51 வயதுடைய பெண் காணாமல் போனதாக முல்லேரிய காவல்நிலையத்தில் அவரது மகள் முறைப்பாடு செய்திருந்தார்.





இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, குறித்த சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்