பதுளையில் பேருந்து 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு பலர் படுகாயம்! tamillk news

tamillk news


பதுளை - மீகஹகிவுல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து 40 அடி பள்ளமொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


பதுளை - மீகஹகிவுல யோதஉல்பத பகுதியில் இன்று (20.10.2023) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இந்நிலையில்,  விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததுடன் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், விபத்தில் காயமடைந்த 30 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தில் காயமடைந்த பயணிகள் மீகஹகிவுல வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்