இஸ்ரேல் - காஸா இடையே உக்கிரமடையும் மோதல்! சடுதியாக அதிகரித்த எண்ணெய் விலை-tamillk news

 

tamillk news


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சடுதியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. 


இன்று காலை நிலவரப்படி,  கச்சா எண்ணெய்யின் விலையானது 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இது சர்வதேச பொருளாதார விவகாரங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

போர் நீடித்து சிக்கலான சூழ்நிலை தொடருமானால்  கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.


தற்போது சர்வதேச அளவில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. 


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்