அஹுங்கல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்! tamillk news

அஹுங்கல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்! tamillk news


 அஹுங்கல்ல பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் கொண்ட குடும்பம் ஒன்று காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதன்படி, பாதிக்கப்பட்டர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, அஹுங்கல்ல, உரகஹாவில் உள்ள பாடசாலைக்கு அருகில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில்,மூவரும் பலாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


இருப்பினும் குடும்ப உறுப்பினர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்