ராஜகிரிய ஒபேசேகரபுர வஜிரவம்ச மாவத்தையில் வாடகை வீட்டில் இருந்து சட்டவிரோத மதுபானம் காய்ச்சிக் கொண்டிருந்த சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் இருவரும் துறைமுக நகரத்தில் பணிப் பரிசோதகர்களாக பணிபுரிந்து வருவதாகவும் அவர்கள் 46 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் வீட்டில் மதுபான ஆலையை நடத்துவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (19) பொலிஸ் குழுவொன்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.
சோதனையின் போது, அந்த இடத்தில் இருந்து 250 லிட்டர் கோடா மற்றும் 100 லிட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இந்நாட்டில் வசிக்கும் சீன பிரஜைகளை இலக்கு வைத்து விற்பனை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
srilanka tamil news
Tags:
srilanka