vavuniya tamil news -வவுனியா செட்டிக்குளம் வீரபும் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிலைகளை விசமிகளால் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
பெயர்த்து எடுக்கப்பட்ட சிலைகள்
ஆலயத்தின் நவக்கிரக விக்கிரகங்கள்,மற்றும் வைரவர்,முருகன்,அம்மன் விக்கிரகங்கள் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்றைய தினம் (04.10.2023) புதன்கிழமை காலை ஆலயத்திற்கு பூஜைக்காக சென்ற ஆலயத்தின் குருக்கள் சிலைக்கள் சேதமாக்கப்பட்டமையை அவதானித்த உடனே ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவித்ததை அடுத்து.
ஆலயத்தின் நிர்வாகத்தினரால் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
Vavuniya-news




