ஹவுதி கிளர்ச்சியாளர்கள் : செங்கடலில் அமெரிக்க கப்பல் மீது தாக்குதல்....! tamil lk news

tamil lk news


செங்கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த ‘பினோச்சியோ’ என்ற கப்பல் மீது தம்மால் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எனினும் லைபீரியாவின் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசியபோதிலும் கப்பல் தாக்கப்படவில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளை மையம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா செவ்வாயன்று , "அமெரிக்கன்" என்று அவர் விவரித்த கப்பலை குறிவைத்து தாக்கியதாக தெரிவித்தார்.


Equasis மற்றும் UN இன் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மூலம் இயக்கப்படும் கப்பல் தரவுத்தளங்களின்படி, Pinocchio என்பது சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட OM-MAR 5 INC க்கு சொந்தமான லைபீரியன்-கொடி கொண்ட கொள்கலன் கப்பல் ஆகும்.


காசாவில் நடந்துவரும் போருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்தில் ஹவுதி குழு தங்கள் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என்று சரியா கூறினார்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்