வத்தளை ஹேக்கித்த ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சூரன்போர் தினத்தன்று மாலை விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசசூரியவை ஆலய நிர்வாகிகள் ஆலாத்தி எடுத்து குங்கும திலகமிட்டுவரவேற்றுள்ளதுடன், பழதட்டினை ஆலய நிர்வாகிகள் வழங்கினர்.
ஆலய விஜயத்தின் ஞாபகார்த்தமாக மங்கள விளக்கேற்றி மூலஸ்தானத்தில் வைத்து பிரதமரிடம் கையளித்தனர். நிகழ்வில் பக்தர்களும் கலந்து கொண்டார்கள்.