வவுனியாவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் சடலமாக மீட்பு!

 

tamil lk news

வவுனியா ( Vavuniya) பேராறுநீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் இன்று மாலை இடம் பெற்றது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,


இன்று மாலை பேராறுநீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்துமூழ்கியுள்ளார்.



இதனை அவதானித்த மற்றொரு நபர் சம்பவம் தொடர்பாக ஊர்மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்து குறித்த நபரை தேடும் பணி ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டது. 


நீண்டநேரமாக தேடுதல் இடம்பெற்றுவந்த நிலையில் சிலமணிநேரங்களின் பின்னர் அவரது சடலம் நீருக்குள் இருந்து மீட்கப்பட்டது.



சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியை சேர்ந்த குரு என்ற இரு பிள்ளைகளின் தந்தையே சாவடைந்துள்ளார்.


சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்