டிசம்பர் (December) மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நாளைய தினம் (12) வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ளது.
அதற்கமைய, அஸ்வெசும பயனாளிகள் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் தங்களது வங்கிக் கணக்குகளில் இருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 1,707,311 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.