பிரித்தானியாவில் கறுப்பு ஜூலைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு

Tamil lk News
 

 இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு ஜூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த போராட்டமானது நேற்றையதினம்(24) பிரித்தானியாவில் இடம்பெற்றது.



 

இலங்கை அரசினால் 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 நாட்களுக்குள் இடம்பெற்ற 3000 அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு 150,000 மேற்பட்ட தமிழ் மக்களின் சொத்துக்கள் இழக்கப்பட்ட கறுப்பு ஜூலைக்கு எதிராக லண்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் ,sw1p 3jx இல் இடம்பெற்றது.



 இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை தொடர்ந்து இடம்பெறுகின்றது என்ற தொனிப்பொருளோடு லண்டன் தமிழீழத்தின் சுயநிர்ணய இயக்கம் , தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் ஏனைய தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் பல நூற்றுக்கணக்கான மக்களின் பங்கெடுப்புடன் கறுப்பு ஜூலைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றுள்ளது.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்