யாழ்ப்பாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நிலநடுக்க எச்சரிக்கை

tamillk.com

இமயமலை தொடர் அருகே எதிர்காலத்தில் 8 ரிக்டர் அளவில நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

இருப்பினும் நிலநடுக்கம் ஏற்படும் திகதிகள் மற்றும் நேரம் முன்கூட்டியே கணிக்க முடியாதென தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று இந்தியாவில் டெக்டோனிக் தகடு ஒவ்வொரு வருடமும் சுமார் 5 சென்டிமீட்டர் நகர்ந்து வருகின்ற காரணத்தால் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு நேபாளத்திற்கும் இமய மலைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் எந்த நேரத்திலும் நிலநடுக்கம் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமயமலையில் உள்ள தர்மசாலாவில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடத்தில் கடந்த திங்கட்கிழமை 3.6 ரிக்டர் அளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்- கொழும்பு நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கம் தொடர்பாக புவியியல் சிரஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவிக்கையில், 8 ரிக்டர் அளவுகோலில் மிகவும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டால் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புகளிலும் உணர முடியும் என சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று இமயமலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட 5 ரிக்டர் அளவினால் நிலநடுக்கத்தை கொழும்பு பிரதேசமும் உணர்ந்துள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்தால் மக்கள் யாரும் கட்டடங்களில் தங்க வேண்டாம். பாதுகாப்பான இடங்கள் அல்லது சமவெளிகளில் செல்லுங்கள் என கூறியுள்ளார்.

அதேபோன்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியாளத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜனக அஜித்பிரேம கூறுகையில், நிலநடுக்கம் ஏற்படுவதை அனுமானிக்க முடியாது எனவும் அதேபோல் இன்றும் நாளையும் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வரும் என்று ஓர் அனுமானம் உள்ளதாக தெரிவித்தார்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்