தேர்தல் இடம்பெறும் வரை அரசு ஊழியர்கள் சேவையில் ஈடுபட முடியாது

tamillk.com


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசு ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பொன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பு தொடர்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வரை அரசு ஊழியர்கள் சேவையில் ஈடுபட முடியாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சம்பளம் மற்ற விடுமுறையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரசு ஊழியர்கள் தொடர்பில் கூறும்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில் அரச ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் அவர்களின் மூன்று மாத கால சம்பளம் இல்லாத விடுமுறை என்ற அடிப்படையில் சேவையிலிருந்து விலக வேண்டும்.

மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளம் இல்லாத விடுமுறையில் உள்ள அரசு ஊழியர்கள் தொடர்பில் தற்போது பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.

தேர்தல் நிபந்தனை

தேர்தலில் போட்டியிடும் அரசு ஊழியர்கள் தேர்தல் நிபந்தனைக்கு உட்பட்ட வகையில் தான் அவர்கள் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள்.

இந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தப்படுவதற்கான உத்தியோப்பூர்வமான அறிவிப்பை எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி அறிவிக்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்