திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றானது இந்துக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்ட நிலையில் தற்போது பௌத்த மயமாகும் பகுதியாக மாற்றப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் திணைக்களத்தினால் அனுராதபுரத்தை சேர்ந்த பௌத்த இடிபாடுகளைக் கொண்ட தனித்துவமான இடமாக அடையாளம் காண முடியும் என தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு முதல் கன்னியா வெண்ணீரூற்று தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி முதல் அரச வர்த்தமானி பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னராக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை வெந்நீர் ஊற்றின் வருமானங்களின் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமானங்கள் அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் கணக்கின் ஊடாக அரச வருமானத்துடன் சேர்ப்பதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இதன் போது தெரிய வருகிறது.
இந்த செயல் திட்டம் கடந்த முதலாம் திகதி தொடக்கம் திருகோணமலை பிரதேச தொல்பொருள் திணைக்களம் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுரா மனதுங்க உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.