தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பு



தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரம் 2-4 மற்றும் 7-10 வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.


இதன்படி, தேசிய பாடசாலைகளுக்கு இடைநிலை தர வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


அதுவரை தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்