லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை (ஏப்ரல் 4) நள்ளிரவு முதல் 1000 ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய விலை நாளை காலை அறிவிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை வீழ்ச்சி மற்றும் ரூபாவின் வலுவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகள் விலை குறைப்புக்கு செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும், இது வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகூடிய திருத்தம் எனவும் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்திகள்



