யாழ்ப்பாணம் - கோப்பாய் இருபாலைப் பகுதியில் இயங்கி வந்த விடுதி ஒன்றில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்ட 80 வயதான போதகர் கொழும்பில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிரடி கைது நடவடிக்கையானது இன்று (11.04.2023) கொழும்பில் வைத்து முன்னெடுக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் இருபாலை பகுதி ஒன்றில் கிறிஸ்தவ சபை ஒன்றில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்து அருள் சகோதரி ஒருவரும் மற்றும் மூவர் அடங்கியவர்களை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவினால் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகளின் முறைப்பாடு
சிறுமிகளிடமிருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறிப்பிட்ட ஆலயத்தில் உள்ள தலைமைப்போதகர் நம்மிடம் தகாத முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக விசாரணையில் தெரிவித்திருந்தனர்.
பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
இதனை அடுத்து தலைமைப் போதகரான 80 வயதானவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று கொழும்பில் வைத்து குறிப்பிட்ட போதகர் கைது செய்யப்பட்டு உடனடியாக அங்கு நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவருடைய கடவுச்சீட்டு முடக்கப்பட்டு பிணையில் விடுவித்தது.
எனினும் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றத்தில் உடனடியாக சரணடையுமாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



