அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் அரச ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்திற்குள், நமது பணப்புழக்கத்தில் பெரிய சுமை ஏற்படும். பொதுவாக, அரசு ஊழியர்களுக்கு மாதம் 25ம் திகதி சம்பளம் வழங்கப்படும், ஆனால் ஏப்ரல் மாத சம்பளத்தை 10ம் தேதிக்கு முன் வழங்க வேண்டும்.
பணப்புழக்கத்தில் இது பெரும் சுமை. 10ம் திகதிக்கு முன் ஓய்வூதியம் மற்றும் சுபிட்சம் வழங்க வேண்டும். அதனை செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததால், நிதி ரீதியாக பணம் செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
Tags:
இலங்கை செய்திகள்



