Jaffna tamil news
தென்னிலங்கையை பௌத்த பிக்கு ஒருவர் யாழ்ப்பாணத்தில் சுண்ணாகம் பகுதியில் தனியார் காணியொன்றினை கொள்வனவு செய்து அக்காணியில் விகாரை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுண்ணாகம், கந்தரோடை பகுதிகளில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும் அதன் எச்சங்களும் காணப்படுகிறது. அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
அப்பகுதிக்கு அருகில் பௌத்தப்பிக்கு ஒருவர் ஒரு வருடத்திற்கு முன்பு சொந்தமாக சுமார் ஆறு பரப்பு காணியினை பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.
இதனையடுத்து பிக்கு குறித்த காணிக்குள் விகாரி ஒன்றிய அமைப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது காணிக்கு அருகில் விகாரை அமைப்பதால் தொல்லியல் எச்சங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என தொல்லியல் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
தொல்லியல் திணைக்களத்தினால் அனுமதி வழங்கியவுடன், ஏனைய அனுமதிகளையும் விரைவில் பெற்று விகாரை கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு பௌத்தப்பிக்கு தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



