யானை தாக்கி யானை பலியானது

 

( srilanka tamil news-tamillk ) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலம்புச்சேனை கிராமத்தில் ஜல்லிக்கட்டு வீதியில் மூன்று காட்டு யானைகளால் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிரண் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


குறித்த பகுதியில் கடந்த 30 ஆம் திகதி நான்கு காட்டு யானைகள் சுற்றித்திரிந்ததாகவும், நான்கு யானைகளும் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை பிரதேசவாசிகள் பார்த்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




உயிரிழந்த காட்டு யானைக்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும் அம்பாறை வனவிலங்கு கால்நடை வைத்திய அதிகாரிகள் இன்று மாலை பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக கிரண் வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்