( vavuniya tamillk tamil news) வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசகர் மற்றும் ஆலய உறுப்பினர்கள் ஒருவர் வவுனியா-நெடுங்கேணி பொலிஸார் இன்று (11) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தில் சங்காபிஷேகத்திற்கான நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருந்த வேலை கடுமையான அவ்வேளையில் மழையும் கடுமையாக இருந்ததால் அவற்றையும் பொருள்படுத்தாமல் பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் விசாரணைகள் ஒன்று இருப்பதாக ஆலயத்தின் நிர்வாகத்தினரை (10.05.2023) வவுனியா நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து விசாரணைக்காக ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்றைய தினம் காலை வவுனியா நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது அவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.