வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு பகுதி சிவப்பு அறிவிப்பு

tamillk

( srillkank tamillk tamil news ) தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த அறிவித்தல் நேற்று (10ஆம் திகதி) நண்பகல் 12.00 மணி தொடக்கம் இன்று (11ஆம் திகதி) நண்பகல் 12.00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது நேற்று மாலை வேளையில் புயலாகவும் பின்னர் இன்று (11ஆம் திகதி) மத்திய வங்கக் கடல் பகுதியில் சந்தா புயலாகவும் உருவாக வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


காலியில் இருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபடும் போது அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் மீனவ மக்களை கேட்டுக்கொள்கின்றது.


இந்த அமைப்பு வடகிழக்கு திசையில் வடக்கு நோக்கி நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேற்படி கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்