இலங்கையை சேர்ந்த 500 பேர் - ரஷ்யாவில் அடிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

srilanka  news


இலங்கையை சேர்ந்த சுமார் 500 பேர் ரஷ்யாவில்  அடிமை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.


இந்தியர் ஒருவர்  மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் சிக்குண்ட இலங்கையர்களே இவ்வாறு அடிமை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றச்செயல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பெரு நகர பகுதிகளில் தொழிற்சாலைகளில் வேலை செய்வதாக இந்த இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களின் ஊடாக அண்மையில் ரஷ்யா நோக்கி பயணித்திருந்தனர்.


பன்றிகள் பண்ணையில் வேலை

இருப்பினும், இவ்வாறு சென்ற இலங்கையர்களுக்கு உறுதியளிக்கப்பட்டவை போன்று தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனவும், அவர்கள் பன்றி பண்ணைகளில் வேலையில் அமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



குறித்த இலங்கையர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட முடியாத நிலையில் பெரும் துயரங்களுடனும் மனவிராதியுடனும் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


கடவுச்சீட்டுகள் தொழில் வழங்கும் நபர் கைவசம்

 சுமார் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் சிறிய அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் கடவுச்சீட்டுக்களை தொழில் வழங்கும் நபர்கள் தம்வசம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.



இருப்பினும், சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்