இந்நிலையில் மோதலின் போது சிலர் காயமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட முறுகல் நிலையின் தொடர்ச்சியாகவே இன்றையதினம் (17) வன்முறை உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தின் பிரதேச செயலருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பகுதியில் பொதுப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு சம்பவங்களிடம் பெற்ற இடங்களில் போத்தல்கள் உடைக்கப்பட்டு இருப்பதாலும் பொதுமக்கள் வீதியில் பயணிக்க முடியாதவாறு பதற்ற நிலை நிலவுகின்றது.
மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்


