( vavuniya news-tamillk ) வவுனியாவில் நகரில் அமைந்துள்ள உணவகமொன்று இன்று (19.07.2023) இரவு 8.25 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீயணைப்பு பிரிவினரின் கடுமையான போராட்டம்
இந்த தீயை பலத்த போராட்டத்தின் மத்தியின் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கண்டி வீதியில் இரண்டாம் குருக்கு வீதி சந்தியில் அமைந்துள்ள பிரபல உணவகமானது இரவு திடீரேன தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள் வவுனியா நகரசபை தீயணைப்புப் பிரிவினருக்கு உடனடியாக தகவல் வழங்கியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் பிரிவினர் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த உணவாகத்தின் அருகில் உள்ள கடைகளுக்கு தீப்பரவல் ஏற்படாத வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் இத் தீப்பரவலுக்கான காரணம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கின்ற போதிலும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.இந்த தீப்பரவல் காரணமாக உணவகம் முற்றாக சேதமடைந்துள்ளமையுடன் யாருக்கும் காயங்கள் மற்றும் உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



