வடமராட்சியில் பெருந்தொகையான கஞ்சா பொதிகள் மீட்பு

jaffna news






( jaffna news-tamillk ) யாழ் - வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில், நேற்றையதினம்(19.07.2023)  சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால்  மீட்கப்பட்டுள்ளது.


வெற்றிலைக்கேணி கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மாமுனை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 18 பொதிகளில் இருந்து 35 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சாவை மீட்கப்பட்டுள்ளது.



இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதாக தெரிவித்தார்.



கடற்படை முகாமில் வைத்துள்ள மீட்கப்பட்ட கஞ்சாவை கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்