யாழ் - பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை அனுஷ்டிப்பு

jaffna news


( jaffna news-tamillk ) தமிழர்களின் மனதில் இருந்து ஒரு போதும் அழியாத நினைவாக இருப்பது 1983ல் இடம்பெற்ற கலவரத்தில் கொத்துக்கொத்தாக அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த நாள் அதன் நினைவாக கறுப்பு ஜூலை நினைவுதினம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23.07.2023)உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.


பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

jaffna news


இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.


jaffna news


 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. 



நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்