யாழ் ராணி புகையிரத்தின் சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா நேற்றைய தினம் (28-07-2023) கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
யாழ் ராணி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் குறித்த நிகழ்வு கேக் வேட்டி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் கடத்தொழில் அமைச்சரும் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர், புகையிரத நிலைய ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.
Tags:
kilinochchi




