மனைவி மகளும் 17 நாட்களாக காணவில்லை - கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

srilanka tamil news


ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட, ரிவர்டேல் பகுதியில் கடந்த 17 நாட்களாக தாயும் சிறு குழந்தையும் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


இருபத்தி இரண்டு வயதான வெள்ளையம்மா சுரேந்திரனி ராணி மற்றும் அவரது ஒரு வயது ஏழு மாத மகள் தருஷிகா அபி ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.



கடந்த பதினேழாம் திகதி தனது குழந்தையுடன் சிகிச்சை பெறுவதற்காக ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு சென்ற அவர் இது வரை வீடு திரும்பவில்லை என அவரது கணவர் மோகனசுந்தரம் சம்பத் குமார் தெரிவித்துள்ளார். கடந்த 17ஆம் திகதி பேருந்தில் ரிக்கிலகஸ்கட நகருக்குச் சென்று ஊரில் பார்த்ததாக பலர் தன்னிடம் கூறியதாக கணவர் குறிப்பிட்டுள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்