இலங்கையில் - சீனா விண்வெளி ஆராய்ச்சிக்கு ஈடுபட பேச்சு

China-srilanka


உலகிலேயே மிகக் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியாக தென்னிலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது நிலையில் விண்கலங்களை தரையிறக்க தென் பகுதி பெருங்கடல் மிகவும் பொருத்தமானது என்பதால் இரு நாடுகளும் விண்வெளி அறிவியலில் ஒத்துழைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.




இன்று(22.07.2023) அலரி மாளிகையில் சீன உயர்மட்டக் குழுவுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.


தற்போது கடனை மறுசீரமைப்பதற்கும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் சீனாவின் ஆதரவை இலங்கை எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கூறினார்.



உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க கலப்பின நெல் மற்றும் பிற உணவுப் பயிர்களைப் பயன்படுத்துவதன் மூலம் வறுமையை  நாட்டில் வெற்றிகரமாக ஒழித்து, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்த சோங்கிங்கின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறும் பிரதமர் தூதுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார்.


தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகளில் பெரிய அளவிலான முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் சீனா தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் யுவான் ஜியாஜுன் உறுதியளித்தார்.


அத்துடன், கலப்பின நெல் வகைகள் மற்றும் ஏனைய உணவுப் பயிர்கள் தொடர்பான நிபுணர்களை இலங்கைக்கு வழங்குவதற்கும்  இணக்கம்  தெரிவித்தார்.



இதன்போது இலங்கைக்கு விவசாயம், தொழில், கல்வி மற்றும் பிற துறைகளில் சீனாவின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.    

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்