மனைவியைக் கொன்று மகனின் உதவியுடன் புதைத்துள்ளார் கணவர்

                              


திமாலியயெத்த இரோன்ஹல்பொல பிரதேசத்தில் 50 வயதுடைய பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது கணவரும் மூத்த மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக ரிதிமாலியெத்த பொலிஸார் தெரிவித்தனர்.


கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். சோமாவதி என்ற 50 வயது பெண்.


குறித்த பெண் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளதாக சந்தேகநபர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சந்தேகநபர்களிடம் இருந்து அவர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சந்தேகநபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதையடுத்து சந்தேகநபர் பாதிக்கப்பட்ட நபரை தாக்கிவிட்டு பின்னர் மூத்த மகனின் உதவியுடன் சடலத்தை தோட்டத்தில் புதைத்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர், 70 வயதுடைய ஆண் மற்றும் அவர்களது மூத்த மகன், 26, ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்