Jaffna tamil news-tamillk news
தேவாலயத்துக்குள் புகுந்த கும்பல்! அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை யாழ்ப்பாணத்தில் சம்பவம் Tamillk news
யாழ் கல்வியங்காடு தேவாலயம் ஒன்றில், அருட்தந்தை ஒருவரின் கழுத்தில் கத்தி வைத்து பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 4.15 மணியளவில் தேவாலயத்துக்குள் உட்புகுந்த நால்வர் அடங்கிய குழுவே அருட்தந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்த 30 ஆயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
அத்துடன் தேவாலயத்தின் உண்டியலில் இருந்த 15ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
Tags:
jaffna