குளியாபிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்! Tamillk news

 Srilanka tamil news- tamillk news


குளியாபிட்டிய ஹெட்டிபொல வீதியின் குருந்துகும்புர சந்தியில் நேற்று (24) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


காயமடைந்தவர் மூனமல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த (49) வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த நபர் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த துப்பாக்கிச்சூட்டின் நோக்கம் இதுவரை வெளியாகவில்லை.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்