Srilanka tamil news-tamillk news
மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் நேற்றிரவு (24) இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மட்டக்குளிய பொலிஸ் குழுவொன்று ஸ்தலத்திற்கு சென்று வெட்டுக்காயங்களுடன் வீதியில் வீழ்ந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்துள்ளார்.
மோதலை ஆரம்பித்த மற்றொரு (28) வயதுடைய இளைஞர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
srilanka