சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர் நாட்டில் நிறுவப்பட்ட முதலாவது எரிபொருள் நிலையம், சினோபெக் என்ற பெயரில் மத்தேகொட சி & ஏ பெற்றோல் நிலையம் தனது சேவைகளை ஆரம்பித்ததாக திரு.சந்திம நாலக கபுருகே தெரிவித்தார்.
இதில் சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தினர் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் மாத்திரம் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
இந்த எரிபொருள் நிலையம் முன்னர் சிபெட்கோவின் கீழ் இருந்ததாகவும், சீனாவின் சினோபெக் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர், அதன் உத்தியோகபூர்வ சின்னத்தின் கீழ் சேவைகள் மேற்கொள்ளப்படும் என்றும் திரு.சந்திம கபுருகே மேலும் தெரிவித்தார்.
புதிய எரிபொருள் நிலையத்தில் 16 எரிபொருள் பம்புகள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு வகை எரிபொருளுக்கும் மூன்று ரூபா சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர் சேவையின் தேவைக்கு ஏற்ப, சினோபெக் நிறுவனம் புதிய பம்புகளை நிறுவி ஒரு வருடத்திற்குள் எரிபொருள் நிரப்பு நிலையத்துடன் பல்பொருள் அங்காடி வளாகத்தை நிர்மாணிக்கவும், எரிபொருள் நிரப்பு நிலையத்தை நவீனப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக திரு.சந்திம கபுருகே தெரிவித்தார்.



