Batticaloa tamil news
மட்டக்களப்பு, வாழைச்சேனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
நேற்று(23) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tags:
batticaloa