யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்துடன் ரமுச்சக்கரவண்டி மோதி விபத்து..! இருவர் பலி, மூவர் காயம்! tamillk news



tamillk news-srilanka tamil news

குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) காலை தனியார் பேருந்தும்  முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.


விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியில் சென்றவர்கள் ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த குழுவினர் என  ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்