நாடு முழுவதும் கிளைகளை திறக்கும் மொட்டுக்கட்சி: Tamillk News

Srilanka Tamil News -  சிறிலங்கா பொதுஜன பெரமுன, நாடு முழுவதும் கட்சியின் கிளைகளை திறக்கும் வேலைத்திட்டத்துடன் மறுசீரமைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

tamillk news


இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,


“செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் இந்த திட்டத்தை நாங்கள் தொடங்கினோம், மேலும் அடிமட்ட தலைவர்களை உருவாக்குவதே எமது முக்கிய நோக்கம்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி உள்ளூர் மட்டத்தில் செயல்படும் மற்றும் மக்களுக்கு பல்வேறு ஆதரவை வழங்குவதற்கான ஊக்கியாக மாறும்.



அதேவேளை, சமீப காலமாக கட்சி அலுவலகங்களை நிறுவுவதில் பங்கு வகித்த கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி.

எந்த நேரத்திலும் எந்த தேர்தலையும் எதிர்கொள்ளவதற்கு கட்சியின் கொள்கைகளை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும் பொதுஜன பெரமுன தயாராக உள்ளது” என்றார்.  

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்