புதுக்குடியிருப்பில் ஆண் ஒருவரின் உடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள தென்னங்காணி ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டு மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென கடந்த 15 ஆம் திகதி உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என்ற 29 அகவை உடைய குறித்த இளைஞனே காணாமல் போய் உள்ளதாக நேற்றைய தினம் (15) உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போன இளைஞன் இன்று புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனைக்கு அருகில் உள்ள தென்னங்கனி ஒன்றிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிலையில் குறித்த சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சடலத்தை மீட்க நடவடிக்கை மற்றும் மேலதிக விசாரணை என்பவற்றை புதுகுடியிருப்பு பொலிஸார்மேற்கொண்டு வருகின்றார்கள்.