ஹப்புத்தளை - பெரகலை உள்ளிட்ட பகுதிகளில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மறுஅறிவித்தல் வரை குறித்த வீதியில் பயணிக்க வேண்டாம் எனவும் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிடுவதை தவிர்க்குமாறும் பொதுமக்களை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, ஹப்புத்தளை – பெரகலை வீதியின் வியாரகலை பகுதியில் மற்றுமொரு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Tags:
Malaiyakam