மலையக தமிழர்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என குறிப்பிடுவதே சிறந்தது - இராதாகிருஸ்ணன்! tamillk news

 

tamillk news


அரசாங்கம் தற்பொழுது இலங்கையில் குடிசன மதிப்பீட்டை ஆரம்பித்துள்ள நிலையில், மலையகத்தில் உள்ள தமிழர்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என குறிப்பிடுவதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.


மலையகத் தமிழர்களை, இலங்கைத் தமிழர்கள் என குறிப்பிடும் போது, அது வடக்கு, கிழக்கு தமிழர்களையும், மலையக தமிழர்களையும் ஒரே எண்ணிக்கையில் கணக்கெடுப்பதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தங்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என்றே குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடுவதே எமக்கு பொருத்தமானதாக இருக்கும்.


இந்த சந்தர்ப்பத்தில் பலரும் பல விடயங்களை குறிப்பிட்டு தங்களுடைய மக்களை திசைதிருப்புவதற்கு முயற்சி செய்கின்றார்கள்.



இந்தநிலையில், இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்பது, மலையகத்தில் வாழும் தமிழர்களின் அடையாளம் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்