srilanka tamil news - கொழும்பில் இன்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்து மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, போக்குவரத்து அமைச்சுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.



