திருகோணமலை ,தோப்பூர் பிரதேசத்திலுள்ள பட்டித்திடல், செல்வநகர் ஆகிய கிராமங்களுக்குள் நேற்றிரவு உட்புகுந்த காட்டு யானைகள் சிறிய அளவில் சேதம் விளைவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதன்போது பட்டித்திடல் கிராமத்தில் தென்னை மரங்களை சேதம் விளைவித்துள்ளதோடு செல்வநகர் கிராமத்தில் உள்ள வயல் நிலங்களை மிதித்து சேதம் விளைவித்துள்ளன.
தாம் விவசாயத்தை நம்பி வாழ்கின்றோம் இந்நிலையில் எங்கிருந்தோ வருகின்ற யானைகள் பயிரினங்களை சேதப்படுத்துவதோடு உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துச் செல்வதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இது விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு பட்டித்திடல் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
trincomalee tamil news
Tags:
trincomalee