பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட நபர்! யாழில் சம்பவம்! tamillk news

 Jaffna news

பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட நபர்! யாழில்  சம்பவம்! tamillk news


தனிமையில் வீதியில் செல்லும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் சேஷ்டையில் ஈடுபடும் ஒருவரின் காணொளி வெளியாகியுள்ளது.


இது தொடர்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளியொன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆத்திசூடி வீதியில் மோட்டார் சைக்கிளில் ஆணுறுப்பை காட்டியவாறு பல்கலைக்கழக மாணவியை பின்தொடர்ந்த ஒருவரை பல்கலைக்கழக மாணவி துணிகரமாக காணொளி பதிவு செய்துள்ளார்


காணொளி எடுக்கப்படுவதை அவதானித்த குறித்த நபர் மோட்டார் சைக்கிளை திருப்பி கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் விரிவுரைகளை முடித்துவிட்டு பல்கலைக்கழக விடுதிகளுக்கும் தங்குமிடத்துக்கும் நடந்து செல்லும் போதும் வரும் போதும் வீதியால் வருகின்ற ஒரு சிலர் ஆணுறுப்பை காட்டி பாலியல் சைகைகளை செய்கின்ற போக்கு அதிகரித்து வருகிறதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது தொடர்பில் கடந்த காலங்களில் ஒரு சிலர் கையும் மெய்யுமாக பிடிபட்டு பொதுமக்களினாலும் பல்கலைக்கழக மாணவர்களாலும் நையப்புடைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.



இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்