மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் 6 பேர் தடுப்புக் காவலில்! tamillk news

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் 6 பேர் தடுப்புக் காவலில்! tamillk news


 மட்டக்களப்பில் நடைபெற்று வரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் 6 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் ஜவர் யாழ் பல்கலைக் கழகத்தையும் ஒருவர் கிழக்கு பல்கலைக் கழகத்தையும் சேர்ந்தவர்கள்.


மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பண்ணையாளர்களின் ஆர்பாட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.இந்த ஆர்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்று ஞாயிற்றுக் கிழமை வடக்கு கிழக்கு பல்கலைக் கழக மாணவர் சமூகம் ஆதரவு தெரிவித்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.போராட்டம் முடிவுற்று யாழ்பாணம் நோக்கி திரும்பும் வழியில் வந்தாறு மூலைப் பகுதியில் வைத்து சந்திவெளி பொலிசாரினால் விசாரணைக்கு என பொலிஸ் நிலையம் அழைத்து சென்று கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.




இதன் போது பொலிசாரினால் சமர்பிக்கப்பட்ட குறித்த வழக்கின் சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிந்து கொண்ட  மட்டக்களப்பு மேலதிக நீதிமன்ற நீதிபதியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான அன்வர் சதாக் சந்தேக நபர்களை பிணையில் விடுப்பதற்கான கிராமசேவகரின் நற்சான்றிதழ் குறித்த நேரத்தில் பிணையாளிகளினால் சமர்ப்பிக்கப்படதா பட்சத்தில் சந்தேக நபர்களை தடுப்புக்காவலில் வைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்